Friday, April 20, 2018

இனி இஸ்லாமிய பிரச்சார பணி செய்யக் கூடாது இது இறை சட்டமா? இப்லீஸின் சட்டமா?


ஹாஜா நுாஹு, அல்தாபி தரப்பிலான வலைதளங்களில் நமது கருத்துக்களை  பதிவதை முடிந்த வரை தவிர்த்தே வருகிறோம் குர்ஆன் ஹதீஸுக்கு முரண் என்று வரும்பொழுது அதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.


ஒருவர் தவறு செய்தால் இனி காலத்துக்கும் அவர் இஸ்லாம் கூறும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இஸ்லாமிய பிரச்சார பணி செய்யக் கூடாது என்பது இறை சட்டமா? இப்லீஸின் சட்டமா?

சகல வகையிலும் அயோக்கியனான ஒரு விபச்சாரகன் தனது விபச்சாரங்களை,  பொய் சத்தியங்களை, பொய் சாட்சியங்களை, ஜகாத், சதகா பண திருடல்களை, கொலை, கொள்ளைகளை மறைக்க தன்னைப் பற்றி பிரமிப்பு ஏற்படுவதற்காக கொண்டு வந்த இஸ்லாமிய விரோத சட்டம்தான். இது.

நிச்சயமாக இது ஷய்த்தானின் சட்டம்தான். குர்ஆன் ஹதீஸுக்கு நேர் முரணான இந்த ஷய்த்தானிய சட்டத்தை. செயல்படுத்துவோம். என்பது போல உள்ளது. இஸ்லாமிய  பிரச்சார களத்தில் இருந்து ஒருவரை ஒதுக்குவோம் என்ற உங்கள் பிரகடனம்.

நீங்கள் விபச்சார கொள்கையே தலைவன் என்பதிலிருந்து விடுபட்டவர்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களை பின்பற்றாதவர்கள் என்றால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்றால் அதற்கு நபி வழியில் ஆதாரம் தாருங்கள்.
  
 பரிசுத்தமான?!? ஜமாஅத்தே நிரூபிக்க திராணி இருக்கா என்பதற்கு அளித்துள்ள பதில்.
நாகூர் கனி என்ற கள்ளமுகநூலில் சகோ, காஜா நூஹ் 5 இலச்சம் மோசடி செய்தார் என்று பரப்பபடுகிறது அது உண்மை என்றால் யாரை மோசடி செய்தாரோ அந்த நபரை அழைத்து வந்து 5 இலட்சம் மோசடி தான் செய்தார் என்று நிருபிக்கும் பட்சத்தில் காஜா நூஹ்கை பிரச்சார களத்தில் இருந்து அவரை ஒதுக்குவதோடு அவரை மோசடி காரர் என்று மக்களிடத்தில் அம்பபடுத்துவோம், இல்லை என்றால் அவதூறு வாதிகளின் மீதும், பொய்யர்களின் மீதும் அல்லாஹ் சாபம் உண்டாகட்டும்... :
குறிப்பு :
22.4.2018 TNTJ கோட்டார் பொதுக் கூட்டத்திற்க்கு முன்பு
குற்றசாட்டை நிருபிக்க தயாரா?

‪+971 58 928 9549: பரிசுத்தமான?!? ஜமாஅத்தே
நிரூபிக்க திராணி இருக்கா
காஜாநூஹ்வின் 5 லட்சம் பணமோசடி
கோட்டார் ஊரில் ISCD என்ற தெருவில் ஒரு இடம் விற்பனைக்கு வந்தது, அது பத்திரபதிவுக்கு பிரச்சினை வரும் ஒரு வில்லங்கமான இடம், விற்பனைக்கு வந்த அந்த இடத்தை பற்றி நன்கு அறிந்த நாட்டாமை காஜாநூஹ் மெயின் தரகராக இருந்து கடையாலுமூடு ஊரை சேர்ந்த தற்போது துபாய் இருக்கும் அப்துர் ரஹ்மான் ( இவன் தான் மாவட்ட பொதுக்குழுவில் ஜமாஅத்திற்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தியதில் ஒருவன்) இடை தரகராக யாரிடம் விற்கலாம் என்று வலை வீசினர்.

இவர்களின் வலையில் சவுதியில் இருக்கும் கடையாலுமூடு கிளையை சார்ந்த ஒரு கொள்கை சகோதரர் சிக்கினார். அதாவது காஜாநூஹ்வை நம்பி ரூபாய் 35 லட்சம் பணத்தை காஜாநூஹ் வீட்டிற்கே சென்று அந்த இடத்தை வாங்க பணம் கொடுத்துள்ளார். அப்போதும் கூட அந்த இடத்தின் பிரச்சனையை காஜாநூஹ் அவரிடம் கூறாமல் பணத்தை வாங்கி கொண்டு இடத்தை முடித்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

காஜாநூஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயரில் பணம் கொடுத்த சகோதரரும் சவுதிக்கு சென்று விட்டார். பின்னர் தான் அந்த இடத்தை பற்றிய உண்மை தகவல் வெளிநபர் மூலம் கிடைக்க, உடனடியாக காஜாநூஹ்வை தொடர்பு கொண்டு இடம் வேண்டாம் தந்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டார்.

அப்போது தான் காஜாநூஹ்வின் சந்திரமுகி உருவம் முழுசா தெரியவந்தது. வாங்கின பணத்தை இதோ அதோ என்று சவ்வு மிட்டாயாக இழுக்க தொடங்கினார். கஷ்டப்பட்டு சிறுகசிறுக சேமித்து வைத்த பணத்தை தராமல் அபகரித்துவிடுவாரோ என்று காஜாநூஹ்விற்கு வெளிநாட்டிலிருந்து போண் செய்தாலும் போணை எடுக்காமல் ஒளிந்து ஓடுகிறார்.

பல மாத போராடங்களுக்கு பிறகு கொடுத்த 35 லட்சத்தில் பிச்சிபிச்சி சில்லறை சில்லறையாக 30 லட்சத்தை கொடுத்துள்ளார். மீதம் 5 லட்சம் பணத்தை இன்று வரைக்கும் கொடுக்கவில்லை.

பணத்தை கொடுத்த கொள்கை சகோதரரும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பதால் இவர் மோசடியை வெளியே சொன்னால் தவ்ஹீத் எதிரிகள் பரிசுத்த ஜமாஅத்தை அவதூறு கூறி விமர்சனம் செய்வார்கள் என்று மவுனம் காத்துள்ளார். ஆனால் இந்த காஜாநூஹ்வின் மோசடி குமரி மாவட்டத்தில் பரவலாக தெரியும், காஜாநூஹ் மீதம் பணம் 5 லட்சத்தை கொடுத்துவிடுவார் என நம்பிக்கை வைத்தனர்.

அந்த பொருளாதார நம்பிக்கை இப்போது இழந்துவிட்டனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் கட்ட வசூலித்த பணத்தையே கள்ளகணக்கு காட்டியும், வாய் வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றியும் சுருட்டிய கும்பல்களாக இருப்பதால், இந்த 5 லட்சம் மோசடியை இப்போது வெளியே பல சகோதரர்கள் கொண்டுவருகின்றனர்.
நாம் கூறிய இந்த செய்தி அவதூறு இல்லை. நாம் உண்மையை தான் விசாரித்து எழுதுவோம். காஜாநூஹ்விற்கு பணம் கொடுத்து ஏமாந்த விசயம் தக்கலை துணிக்கடைக்காரன
ின் தம்பிக்கு தெரியும், காரணம் வெளிநாட்டில் இருவரும் சேர்ந்து இருந்தனர். (துணிக்கடைக்காரன் தம்பியும் இன்று காஜாநூஹ்விற்கு சொம்பு தூக்குகிறார்)
இந்த 5 லட்சம் மோசடியை மறுப்பாரா காஜாநூஹ்..

ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
அதாவது ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

71 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பலுக்கு 5 லட்சம் எம்மாத்திரம்.?


No comments: